×

டூவீலர் திருட்டு

தர்மபுரி, மே 4: அரூர் நெருப்பாண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைராஜ் மகன் சிவராமன்(26), தொழிலாளி. இவர் சோகத்தூர் கூட்ரோட்டில் உள்ள நண்பரது வீட்டுக்கு, நேற்று முன்தினம் தனது டூவீலரில் சென்றுள்ளார். வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு, நண்பரது வீட்டில் தூங்கினார். மறுநாள் காலை பார்த்த போது, அவரது டூவீலர் திருடு போயிருப்பது தெரிந்தது. இதுபற்றி அவர் தர்மபுரி டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Wheeler ,Dharmapuri ,Sivaraman ,Vellaraj ,Komanandakuppam ,Arur ,Sogathur Koodrod ,
× RELATED சென்னையில் திருடு போன டூவீலருக்கு ஒட்டன்சத்திரத்தில் அபராதம் விதிப்பு